×

பருவமழை பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி?

திருவில்லிபுத்தூர், அக். 17: பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து, தீயணைப்புத் துறையினர் விளக்கம் அளித்தனர்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த மழை காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாப்பது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திரு வில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு அது குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு திருவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில், தீயணைப்புத் துறையினர் செயல்விளக்க நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி