×

டெங்கு தடுப்பு தீவிரம்

வருசநாடு, அக்.17: மயிலாடும்பாறை ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. மயிலாடும்பாறை ஊராட்சியில் அண்ணாநகர், மலைராஜபுரம், மயிலாடும்பாறை போன்ற பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். இங்கு கடந்த சில தினங்களாக டெங்கு தடுக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பொதுமக்கள் பயன்படுத்துகின்ற பாத்திரம் போன்ற பொருட்களை கண்டறிந்து பிளீச்சிங் பவுடர் கொசு மருந்து போன்றவை மூலம் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பணி ஆய்வின்போது மயிலாடும்பாறை ஒன்றிய ஆணையாளர் கருப்புசாமி, திருப்பதிவாசகன், ஊராட்சி செயலர் பாலமுருகன் மற்றும் தூய்மை காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு