×

அரசு பள்ளி மாணவனுக்கு விருது

தேன்கனிக்கோட்டை, அக். 17: அஞ்செட்டி அருகே உள்ள சாகலப்பள்ளி நடுநிலைப்பள்ளியில், கனவு மாணவர் விருதை பெற்ற, மாணவன் வேலுசாமியை, பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டினர். அஞ்செட்டி தாலுகா சாகலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் வேலுசாமி,  ஓவியம், கணினி, அறிவியல் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கி வருகிறார். இதையடுத்து மாணவன் வேலுசாமி, அப்துல்கலாம் கனவு மாணவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்துல்காலம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில், செங்கல்பட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் மாணவன் வேலுசாமிக்கு அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், கனவு மாணவர் விருது வழங்கி கௌரவித்தார்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்