×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைந்தது..

ஓசூர்,அக்.17:  ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று 488 கனஅடியாக குறைந்தது. தென்பெண்ணை  ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தின் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு  பகுதிகளில் பெய்த கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த ஒரு வாரத்திற்கு  முன்பு 1,368  கனஅடி நீர் வந்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 3  நாட்களாக நீர்வரத்து படிபடியாக குறைந்து நேற்று விநாடிக்கு 488 கன அடி  குறைந்தது. கெலவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவு 44.28 அடியாகும்.  தற்போது அணையில் 41.66 அடி நீர் தேக்கப்பட்டு உள்ளது. அணைக்கு விநாடிக்கு  488 கனஅடி நீர் வருகிறது. அணையின் பாதுகாப்பை கருதி, அணைக்கு வரும் நீர்  முழுவதையும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Kelavarapalli Dam ,
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...