×

இருசக்கர வாகன திட்டத்தில் மானியம் பெற ஆவணம்

சமர்ப்பிக்க அறிவுறுத்தல்தர்மபுரி, அக்.17: தர்மபுரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் உரிய ஆவணங்களை வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்திற்கு நடப்பாண்டில் 2097 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உத்தரவு பெற்ற பயனாளிகளில் பலர் இதுவரை வாகனம் வாங்கி மானியம் பெற விண்ணப்பம் வழங்காமல் உள்ளனர். எனவே மானியம் பெற விண்ணப்பம் வழங்காதவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) அலுவலகத்தில் வரும் 25ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா