×

அரூரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த கோரிக்கை

அரூர்,அக்.17: அரூரில் குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குற்றச்சம்பவங்கள், திருட்டு உள்ளிட்டவைகளில் குற்றவாளியை கண்டுபிடிக்க பல இடங்களில் உதவியாக இருப்பது கண்காணிப்பு கேமராக்கள் ஆகும். அரூரில் பேருந்து நிலையம், கச்சேரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு, நான்குரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் திருட்டு சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவே அந்த இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : crimes ,Aurora ,
× RELATED லோன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி 6...