அரூர்,அக்.17: தேசிய வேளாண்மை மற்றும் ஊராக மேம்பாட்டு வங்கி சார்பில், கிராமபுற மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் மொரப்பூர் விப்ரோ தொண்டு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது. தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நபார்டு வங்கியின் தர்மபுரி மாவட்ட மேலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நேரடி கடன், குழு பராமரிப்பு, பேரேடுகள் கையாளுதல் குறித்து எடுத்துரைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட இயக்குநர் அமுதா நன்றி கூறினார்.