×

கம்பைநல்லூர் பகுதியில் மழைக்கு மின் கம்பம் மரங்கள் சாய்ந்தது

அரூர், அக்.17: கம்பைநல்லூர், இருமத்தூர், மாவேரிப்பட்டி, திப்பம்பட்டி கூட்ரோடு, செங்குட்டை மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. கம்பைநல்லூர் இருமத்தூர் சாலையில் மின்கம்பம் சாய்ந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது. விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு இது போன்ற கனமழை பெய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : area ,Kampinallur ,
× RELATED வாட்டி வதைக்கும்...