×

பாவூர்சத்திரம் சுற்றுப்பகுதியில் நாளை மின்தடை

தென்காசி, அக். 17: தென்காசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கீழப்பாவூர் துணை மின் நிலையத்தில் நாளை (18ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி வெள்ளி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Bauer Square ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது