×

நாங்குநேரியில் சரத்குமார் இன்று முதல் பிரசாரம்

நெல்லை, அக். 17: நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அஇசமக தலைவர் சரத்குமார் இன்று (17ம் தேதி) முதல் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4 மணிக்கு நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கண்ணன் குடியிருப்பு, கண்டிகைபேரி, இளையநயினார்குளம், ஏமன்குளம், மன்னார்புரம், இட்டமொழி, காரியாண்டி, செண்பகராமநல்லூர், மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாளை (18ம் தேதி) மாலை கீழ

சடையமான்குளம், மஞ்சுவிளை, களக்காடு, கல்லடி சிதம்பராபுரம், கீழத்துவரகுளம், பெரும்பத்து, ஏர்வாடி, டோனாவூரில் பிரசாரம் செய்கிறார்.
19ம் தேதி பாளை ஒன்றியத்திற்குட்பட்ட மேலகுளம், பர்கிட்மாநகரம், தோணித்துறை, பாளையஞ்செட்டிகுளம், ரெட்டியார்பட்டி, ஆரைகுளம், ஓமநல்லூர், திடியூர் ஜங்ஷன், சிதம்பராபுரம், மாவடி ஆகிய இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

Tags : Sarathkumar ,
× RELATED சொல்லிட்டாங்க…