நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி நகர்நலத்துறை சார்பில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாநகர் நல அலுவலர் கின்சால் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஸ், மகாதேவன், பகவதி பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் என்.எஸ்.எஸ் மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரியில் மனித சங்கிலியும், கல்லூரி நுழைவு வாயில் முதல் கல்லூரி அலுவலகம் வரை டெங்கு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.