மயிலாடுதுறை,அக்.17: மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டை வடக்குவீதியை சேர்ந்தவர் சாரங்கபாணி(75). சென்ற வாரம் மதிய வேளையில் சாரங்கபாணி நிறைந்த குடிபோதையில் வீட்டிற்கு சென்று தன் மனைவி கலா(65)விடம் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு போகவேண்டும் பணம் கொடு என்று கேட்டுள்ளார். அதற்கு கலா பணம் கொடுக்க முடியாது என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரங்கபாணி மனைவி அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே கிடந்த செங்கல்லை எடுத்து வந்து மனைவியின் இரண்டு கன்னங்களிலும் அடித்துப்போட்டுவிட்டு சென்று விட்டார். கன்னங்களில் காயத்துடன் கலா மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் சாரங்கபாணி மீது வழக்குப் பதிவுசெய்து அவரை கைதுசெய்தனர்.