×

பிற மாவட்ட மீனவர்கள் குவிந்தனர் சீர்காழி கால்நடை மருத்துவமனை எதிரே திறந்தே கிடக்கும் கழிவுநீர் கால்வாய் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

சீர்காழி, அக்.17:சீர்காழி கால்நடை மருத்துவமனை எதிர் திறந்தே கிடக்கும் கழிவுநீர் கால்வாயால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே அரசு கால்நடை மருத்துவமனை எதிரே சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது இந்த கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கழிவு நீர் செல்லும் கால்வாயில் போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் உடைந்து இருப்பதால் கழிவுநீர் கால்வாய் திறந்து கிடைக்கிறது. இதில் தினந்தோறும் கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை உடனே சரிசெய்து கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : District Fishermen ,
× RELATED 3 பேரை கத்தியால் வெட்டிய விவகாரம் புதுவையை சேர்ந்த சிறுவன் அதிரடி கைது