×

ஊர் தலைவரை தாக்கிய 5 வாலிபர்கள் மீது வழக்கு

புதுச்சேரி,  அக். 17:    புதுவை, வம்பாகீரப்பாளையம், முத்துமாரியம்மன் கோயில் வீதியைச்  சேர்ந்தவர் முருகேசன் (57). அப்பகுதி ஊர் தலைவராக உள்ளார். அந்த பகுதியில்  பெண்களை கேலி செய்தது தொடர்பாக சிலரை பஞ்சாயத்து பேச முருகேசன்  அழைத்திருந்தார். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், மணிமாறன்,  சூர்யா, மதியழகன், விசாகன் உள்ளிட்ட சிலர் சம்பவத்தன்று முருசேனை அங்குள்ள  அங்காளம்மன் கோயில் வீதி அருகே அசிங்கமாக திட்டி தாக்கியதோடு மிரட்டல்  விடுத்தார்களாம். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை  எஸ்ஐ பிரபு தலைமையிலான போலீசார் 5 பேர் மீதும் வழக்குபதிந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Tags : plaintiffs ,city chief ,
× RELATED பிளம்பர் கொலை வழக்கில் 8 வாலிபர்கள் பிடிபட்டனர்