×

இன்றைய மின்தடை

விருதுநகர், அக். 16: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள தகவல்: துலுக்கப்பட்டி துணைமின்நிலையத்தில் அக்.16 (இன்று) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்குரோடு, வச்சகாரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூர் ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

விருதுநகர், மல்லாங்கிணற்றில் நாளை மின்தடை: விருதுநகர் உள்ளரங்கு துணைமின்நிலையத்தில் நாளை (அக்.17) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், ரயில்வே பாதைக்கு கிழக்குப் பகுதியில் ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, பட்டேல் ரோடு, பாண்டியன் நகர், எல்பிஎஸ் நகர் பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.இதேபோல, மல்லாங்கிணறு துணைமின்நிலையத்தில் நாளை (அக்.17) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி மல்லாங்கிணர், வலையங்குளம், நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வலுக்கலொட்டி, வரலொட்டி ஆகிய ஊர்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...