×

மாவட்டம் திருவில்லி. சீனிவாச பெருமாள் கோயிலில் ரூ.4.84 லட்சம் உண்டியல் வசூல்

திருவில்லிபுத்தூர், அக். 16: திருவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோயிலில் ரூ.4.84 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.திருவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி  சனிக்கிழமை நிறைவடைந்த பின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது  வழக்கம். 4வது சனிக்கிழமை நிறைவடைந்ததையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும்  பணி கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிரந்தர மற்றும் தற்காலிக  உண்டியல்கள் அனைத்தும் கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. உண்டியல்கள்  திறக்கப்பட்டு நிர்வாக அதிகாரி இளங்கோவன் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில்,  காணிக்கையாக ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 890 இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.





Tags : District Tiruvili ,Srinivasa Perumal Temple ,
× RELATED கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு