×

வீடு புகுந்து திருட்டு

அவிநாசி, அக். 16:  அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி அபிராமி கார்டனில் வசித்து வருபவர் சுரேஷ் (49). இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Theft ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்