×

திமுக இளைஞரணி பரிசளிப்பு விழா

காரைக்குடி, அக். 16:  காரைகுடியில் திமுக இளைஞரணி சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நகனி செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து, பேராசிரியர் அய்க்கண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நடுவர் போடி காமராஜ், ஜக்கன்,  முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சீ.ரவி, வழக்கறிஞர் பிரிவு பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிகண்ணாத்தாள், தெய்வாணை இளமாறன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட மருத்துவ அணி டாக்டர் பிரபாவதி, ஐ.டி பிரிவு சரிவர்ணன், நெப்போலியன், முன்னாள் கவுன்சிலர்கள் சன்சுப்பையா, அன்பு, நகர அமைப்பாளர் மூர்த்தி, செல்வகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துஷாந்த் பிரதீப்குமார், சேதுபதிராஜா, ரவி, பொற்கோ,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK Young Woman Gifting Ceremony ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்