குன்னூர், அக். 16: குன்னூரில் தொடர்ந்து பெய்த மழையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் பழங்கால கல்லறைகளின் சிற்பங்கள் சேதம் அடைந்தது. குன்னூர் பகுதிகளில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மழை பெய்து வருகிறது.
தொடர்மழையால், நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தின் முன்புறம் இருந்த தடுப்புசுவர் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது இதனால், பழமை வாய்ந்த கல்லறையின் சிற்பங்கள் மற்றும் பளிங்கு கற்களால் ஆன சிலைகள் சேதம் அடைந்தது. இடிந்து விழும் போது அந்த பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. கல்லறை பகுதி சேதம் அடைந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.