×

தொழிலக பாதுகாப்பு அலுவலகங்களில் 8 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை, அக்.16: மதுரையில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் அலுவலகங்களில் 8 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.குறைந்த பட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்எஸ்எல்சி,க்கு மேல் கல்வித் தகுதியுடைய பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க விரும்புவோர் https://dish.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பம், கல்வித்தகுதிகள் விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர், கூடுதல் இயக்குநர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், 11ஏ/1, விநாயகர் நகர் முதல் தெரு, மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில், கேகேநகர், மதுரை-625 020 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

இணை, துணை இயக்குநர் அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர், எண்23, பழைய அக்ரஹாரம், தல்லாகுளம், மதுரை-2 என்ற முகவரிக்கு அனுப்பலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் உரிய அலுவலகத்தில் அக்.31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்தகவலை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.


Tags : Occupational Safety Offices ,
× RELATED தொழிலக பாதுகாப்பு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்