×

கஞ்சா விற்றவர் கைது

கோவை, அக்.16: கோவை  துடியலூர் போலீசார் நேற்று முன்தினம் சின்னதடாகம் பகுதியில்  ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு உள்ள செங்கல் சூளை பகுதியில் நின்று கொண்டு  கஞ்சா விற்றதாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வலசை பகுதியை சேர்ந்த ரவி  (38) என்பவரை கைது செய்தனர். இவர் செங்கல் சூளையில் ஊழியராக வேலை  பார்த்து கொண்டே கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரிடமிருந்து 1250 கிராம்  கஞ்சா, ரூ.1100 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்