சூலூர் அருகே போலீசை குத்திய ரவுடியின் கள்ளக்காதலியிடம் விசாரணை

சூலூர்,அக்.16:  சூலூரில் போலீசை கத்தியால் குத்திவிட்டு தப்பிய ரவுடியின் கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு தனியார் மில்லில் பதுங்கியிருந்த ரவுடி பாண்டி என்பவரை கருமத்தம்பட்டி போலீசார் பிடிக்கச் சென்றபோது போலீசை கத்தியால் குத்திவிட்டு ரவுடி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக போலீசார் பாண்டி  அவரது கள்ளக்காதலியான ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அனிதா ஆகியோர் படங்களை சமூக வலைதலங்களில் பதிவிட்டு தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் குறிப்பிட்ட மில்லிற்கு சென்று பாண்டியின் கள்ளக்காதலியை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அனிதா திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை  செய்து கொண்டிருந்தபோது  பாண்டி தன்னை காதலித்ததாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன் அப்பநாயக்கன்பட்டிக்கு குடிபெயர்ந்து அங்குள்ள ஒரு தனியார் பஞ்சு  மில்லில் வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அனிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி (கணவர் இறந்து விட்டார்) 15 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாக அனிதா தனது குடும்பத்தினருடன் எவ்வித தொடர்பிலும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: