கோவை, அக். 16: உள்ளாட்சிகளில் கட்டிட அனுமதிக்காக வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வில் குடியிருப்புகளுக்கு 7000 சதுர அடி வரை கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் செயல்முறை ஆணை கடிதம் படி கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும், நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ் திட்ட அனுமதி அனைத்து விதிகளுக்குட்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் மே மாதம் 25ம் தேதி 2010ம் வருடம் முதல் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டிட அனுமதிக்கான
வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வில் தற்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ல் அரசால் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைத்தொடர்ந்து, உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரப் பகிர்வு வழங்க பல கோரிக்கைகள் வரப்பெற்றது.