பழநி, அக். 16: முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய பண்பாட்டுத்துறை தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் அப்துல்கலாமின் எளிமை- தூய்மையான வாழ்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அப்துல்கலாமின் வாழ்வியல் சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பழனிச்சாமி, மனோகரன், காங்காதரன், கௌதமன், இளைஞர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Postal Regn No. MA /03/2018 - 2020