ஈரோடு, அக்.16: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். காவல் பணியில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் விதமாக நீத்தார் நினைவு தினம் வரும் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் ஈரோட்டில் மினி மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது.