ஈரோடு, அக். 16: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். நிரந்தர ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசாணை எண் 338யை அமல்படுத்த வேண்டும். வாரிய ஆணை எண் 505யை இந்த வட்டத்திற்குட்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.