ஈரோடு, அக்.16: பவானிசாகர் அடுத்துள்ள கொத்தமங்கலம் துண்டன்சாலை பிரிவு பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானிசாகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பவானிசாகர் இக்கரை தத்தப்பள்ளி கலைஞர் நகரை சேர்ந்த கஞ்சாமணி மனைவி கிட்டாயாள் (60) என்பவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.