×

பஸ் மோதி விவசாயி பலி

பழநி, அக். 16: பழநி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). விவசாயி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பழனிச்சாமி நேற்று மாலை அங்குள்ள குளக்கரைக்கு டூவீலரில் சென்று விட்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...