ஈரோடு, அக்.16: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பவானி கோட்ட தலைவர் குஞ்சிரெட்டி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராமசாமி, உதவி மாநில தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பயிற்சி காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பதவி உயர்வுகளை முன் தேதியிட்டு வழங்க வேண்டும். போஸ்ட்மேன் 1-01-1996ம் ஆண்டு முதல் உயர் ஊதிய விகித்தத்தில் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.