தென்காசியில் மொபைல் வியாபாரிகள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தென்காசி, அக்.16:  தென்காசியில் மொபைல் வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் இப்ராகிம்ஷா தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் என்ற சிவா வரவேற்றார். கூட்டத்தில் தென்காசி எஸ்ஐ மாதவன், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் துணைத்தலைவர் சண்முகம், பொருளாளர் சமீம், துணை செயலாளர் முஸ்தபா, செயற்குழு உறுப்பினர்கள் செய்யது கரீம், மஜீத்ஷா, மீரான், அப்துல்லா, பீர்முகம்மது, அப்துல்ரகுமான், நவ்ஷாத், ஜாகிர்உசேன் உட்பட தென்காசி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மொபைல் விற்பனையாளர்கள், ரீ டெய்ல் விற்பனையாளர்கள், ரீசார்ஜாளர்கள், சர்வீஸாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: