பத்தமடையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

வீரவநல்லூர், அக்.16: பத்தமடையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. பத்தமடையில் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவுரையின் படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் ஆலோசனையின் படியும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு செயல் அலுவலர் முருகன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதில் சுகாதார மேற்பார்வையாளர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: