நெல்லை, அக். 16: அம்பாசமுத்திரம் சந்தை பகுதியை சேர்ந்த பிச்சையா மனைவி சின்னம்மாள் (85). இவர் நேற்று சந்தை பகுதி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னம்மாள் இரவு இறந்தார். விபத்து குறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.