மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

கும்பகோணம், அக். 16: பந்தநல்லூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர், திட்டச்சேரி கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக திட்டச்சேரி விஏஓ பாண்டிஸ்வரனுக்கு தகவல் வந்தது.இதையடுத்து திட்டச்சேரி,கோணுளாம்பள்ளம் சாலையில் வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அந்த நேரத்தில் மாட்டு வண்டி ஓட்டி வந்த திட்டச்சேரியை சேர்ந்த மோகன், கோவிந்தராஜன் ஆகியோர் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து பந்தநல்லூர் போலீசில் விஏஓ பாண்டிஸ்வரன் ஒப்படைத்தார்.இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: