×

விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் திமுக இளைஞர் அணி சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

காரைக்கால், அக்.16: காரைக்கால் திமுக இளைஞர் அணி சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி அளவிலான மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாஜிம் தலைமை வகித்தார். கீதாஆனந்தன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, தலைமை கழக பேச்சாளர் திருப்பூர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர், நாஜிம் பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடுகளை காரைக்கால் திமுக இளைஞரணி அணி அமைப்பாளார் முகமது ரிபாஸ், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Tags : Collector ,Youth Team ,Anna ,DMK ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...