×

கரூர் பேருந்து நிலைய மேற்கூரையில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுவதால் அச்சம்

கரூர், அக். 16: கரூர் பேருந்து நிலையத்தில் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.கரூர் பேருந்து நிலையம் இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பேருந்து நிலையத்தில் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விடுகின்றன. திண்டுக்கல் பேருந்துகள் நிற்கும் பகுதி மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து கொண்டுள்ளன. பேருந்து நிலையத்தில் நீண்டகாலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : bus stand ,Karur ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி