×

தரகம்பட்டியில் இயற்கை இடர்பாடுகள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கடவூர், அக். 16: தரகம்பட்டியில் இயற்கை இடர்பாடுகள் சம்மந்தமாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை இயற்கை இடர்பாடுகள் சம்பந்தமாக விழிப்புணர்வு பேரணி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கடை வீதி சென்றது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் மைதிலி தலைமை வகித்தார். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (பொ) மனோகரன் இயற்கை இடர்பாடுகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சந்தானச்செல்வன், வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ், வருவாய் அலுவலர் பாலச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ், பழனியப்பன் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது