×

ராயனூர், தாந்தோணிமலை போல் அனைத்து பகுதியிலும் சாக்கடை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், அக். 16: ராயனூர் மற்றும் தாந்தோணிமலை பகுதிகளில் சாக்கடை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுவது போல பிற பகுதிகளிலும் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகளின் குடியிருப்புகள் வழியாக செல்லும் பிரதான சாக்கடைகள் தற்போது ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதே போல், இந்த பகுதிகளின் உட்புற தெருக்களில் சிறிய அளவில், அதிக ஆழமில்லாத சாக்கடை வடிகால்கள் அதிகளவு உள்ளன. இவையனைத்தும் பிரதான சாக்கடையில் கலப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆழம் அதிகம் இல்லாத இந்த சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் செல்லாமல் கடும் துர்நாற்றம் உட்பட பல்வேறு தொந்தரவுகளை இந்த பகுதியினர் அனுபவித்து வருகின்றனர்.எனவே, பிரதான சாக்கடைகள் ஆழப்படுத்துவது போல, மற்ற பகுதிகளில் உள்ள சாக்கடை வடிகால்களையும் தூர்வாரி ஆழப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Rayanur ,areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...