×

இளம்பெண்ணை கேலி செய்த வாலிபர் கைது

சிதம்பரம், அக். 16: மதுரை புதுவசந்தம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி மனைவி பத்மபிரியா(35). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறையில் நடன ஆசிரியர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் கஞ்சி தொட்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அருகில் சாப்பிட்டு கொண்டிருந்த சிதம்பரம் ஆரணியம்Wமன் கோயில் தெருவை சேர்ந்த சுந்திரமூர்த்தி மகன் விஜய்பாபு(33) என்பவர் பத்மபிரியாவை பார்த்து பிரியாணிதான் சாப்பிடுவாயா? என கேட்டு கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து பத்மபிரியா சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் விஜய்பாபுவை கைது செய்தனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு