திருச்செங்கோடு, அக். 16: வருகிற 2025ம் ஆண்டுக்குள் விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து எடுத்துக்கூறினார். மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் முத்துசாமி, போக்குவரத்து குறியீடுகள் குறித்து விளக்கினார். இந்த பள்ளியில் சாலை பாதுகாப்பு குழுவை வட்டார போக்குவரத்து துறையினர் அமைத்தனர். அவர்களுக்கு சாலை விதிகள் குறித்து பயிற்சி அளித்து இக்குழு செயல்படும். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சேர்ந்தவர்கள், ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை சேர்ந்தவர்கள், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்