விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை: மாதவரத்தில் பரபரப்பு

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (23). பால் வியாபாரி. இவருக்கும், அதே பகுதி வினோபாஜி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக ேநற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.  இதையடுத்து, ரமேஷ் மீது வெங்கடேசன் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், ரமேஷுக்கு போன் செய்து, விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். இதனால் பயந்துபோன ரமேஷ், ேநற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பெரம்பூர் லோகோ அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ரமேஷ் தற்கொலைக்கு வெங்கடேசன் தான் காரணம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கூறி ரமேஷின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு மாதவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து அங்கு வந்த மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: