திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (23). பால் வியாபாரி. இவருக்கும், அதே பகுதி வினோபாஜி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக ேநற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதையடுத்து, ரமேஷ் மீது வெங்கடேசன் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், ரமேஷுக்கு போன் செய்து, விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். இதனால் பயந்துபோன ரமேஷ், ேநற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பெரம்பூர் லோகோ அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.