தாம்பரம்,: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் தனியார் வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விதிமீறி அருகில் உள்ள புதுவை நகர் சாலையில் விடப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புதுவை நகர், 2வது தெருவில் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீர் வழிந்தோடி, அங்குள்ள குடிநீர் பம்பு அருகே தேங்கி நிற்கிறது.