தண்டையார்பேட்டையில் 20 மணிநேர மின்தடை பொதுமக்கள் தவிப்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மற்றும் துர்கா தேவி நகர் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால், அதிகாலை வரை மின் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இரவு முழுவதும் இந்த பகுதி மக்கள் தூங்க முடியாமல் கொசுக்கடியால் அவதிப்பட்டனர்.  ஆனால் எங்கு பழது ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்நிலையில், 20 மணி நேரத்திற்கு பிறகு தான் எந்த இடத்தில் பழுது ஏற்பட்டது என்று தெரிந்தது. தொடர்ந்து அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.  பழுதை கண்டுபிடிக்க முடியாமல் 20 மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்கள் திணறிய சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

Related Stories: