கழுகுமலையில் கராத்தே திறனாய்வு போட்டி

கழுகுமலை, அக். 16: கழுகுமலையில் கராத்தே திறனாய்வு போட்டி நடந்தது. கழுகுமலையில் உள்ள திருமண மண்டபத்தில் மினா மிகன் புடோ சார்பில் கராத்தே திறனாய்வு போட்டி நடத்தப்பட்டது. தலைமை தேர்வாளராகப் பங்கேற்ற சிகான் சுரேஷ், இப்போட்டியை நடத்தி சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தார். இதில் சுமார்  150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி கலர் பட்டை திறனாய்வு போட்டியில் வென்று கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ் பெற்றுக்கொண்டனர். தேர்வு குழுவின் பயற்சியாளர்களாக நாராயணன், ராஜேஷ், ஜெகதீஷ் செயல்பட்டனர். ஏற்பாடுகளை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மினா மிகன் புடோ அமைப்பின் பயிற்சியாளர் வெங்கடேஷ்வரன் செய்திருந்தார்.

Related Stories: