தூத்துக்குடியில் வாலிபரை மிரட்டியவர் கைது

தூத்துக்குடி, அக். 16:  தூத்துக்குடி  டி.சவேரியர்புரத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்  (30). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் தாளமுத்துநகர் ராஜகோபால்நகர் சந்திப்பு பகுதியில் நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த சுனாமி காலனியை சேர்ந்த  மகேந்திரன் மகன் விஜயசேகர் (20) என்பவர், வழிமறித்து மிரட்டி பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் ஆத்திரமடைந்த விஜயசேகர், அலெக்சிடம் கத்தியை காட்டி  கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த தாளமுத்துநகர்  போலீசார், விஜயசேகரை கைதுசெய்தனர்.

Related Stories: