பிரதம மந்திரியின் கவுரவ நிதியுதவி திட்டம் ஆதார்பதிவு எண் சரிபார்க்க விவசாயிகளுக்கு அழைப்பு

தா.பேட்டை, அக்.15: பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்டத்தில் ரூ.6ஆயிரம் நிதி பெறுவதற்காக விண்ணப்பித்த தா.பேட்டை வட்டார விவசாயிகள் ஆதார்அட்டையில் உள்ளபடி பெயர்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.தா.பேட்டை வேளா ண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:தா.பேட்டை வட்டார விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தின்கீழ் ஏற்கனவே பதிவு செய்துள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் இதுவரை சேர்க்கப்படாமல் இருந்தால் உடனடியாக தங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்குபுத்தகம், கம்யூட்டர் சிட்டா ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.இத்திட்டத்தில் ஏற்கனவே இணைந்த விவசாயிகளில் முதல் 2 தவணை நிதி பெற்றவர்கள் சிலருக்கு 3 வது தவணை வரவு வைக்கப்படாமல் இருந்தால், தங்களது பெயரை ஆதார் அட்டையில் உள்ளபடி இணையத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். விவசாயிகள் தற்போதைய நிதி வழங்கப்பட்ட விவரம் குறித்து இணையத்தில் பார்மஸ் கார்னர் என்ற ஆப்சனில் ஆதார் எண் அல்லது வங்கிகணக்கு எண்ணை உள்ளீடு செய்து தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தா.பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்று கூறியுள்ளார்.

Related Stories: