×

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

திருச்சி, அக்.15: திருச்சி உறையூரில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் சபாபதி (38). பீரோ கம்பெனியில் வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த அவர் நேற்றுமுன்தினம் விஷம் குடித்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு