திருச்சி, அக். 15: திருவானைக்காவலை சேர்ந்த பால்காரர் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (37). பால் வியாபாரி. இவர் நேற்றுமுன்தினம் கொண்டையம்பேட்டை மலட்டாற்றில் குளிக்க சென்றார். அப்போது மயக்கம் அடைந்த அவர் நீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்த ரங்கம் போலீசார், தீயணைப்பு துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.