ஆற்றில் மயங்கி விழுந்த பால்காரர் நீரில் மூழ்கி பலி

திருச்சி, அக். 15: திருவானைக்காவலை சேர்ந்த பால்காரர் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார்.

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (37). பால் வியாபாரி. இவர் நேற்றுமுன்தினம் கொண்டையம்பேட்டை மலட்டாற்றில் குளிக்க சென்றார். அப்போது மயக்கம் அடைந்த அவர் நீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்த ரங்கம் போலீசார், தீயணைப்பு துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: