முதியவர் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, அக். 15: பூதலூர் அருகே பூச்சி மருந்தை குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பூதலூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (75). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செல்வராஜ் இறந்தார்.

இதுகுறித்து பூதலூர் போலீசில் செல்வராஜ் மகன் பிரபாகரன் புகார் செய்தார். அதில் தனது தந்தைக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். வலி தாங்க முடியாமல் விஷம் குடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: