திருவிடைமருதூரில் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர், கோர்ட்டில் ஆஜர்

கும்பகோணம், அக். 15: கொலை, கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 3 பேரை திருவிடைமருதூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே நாச்சியார்கோயில் பகுதியில் கொலை முயற்சி, கொள்ளை, கொலை என பல்வேறு வழக்குகள் தொடர்பாக லாலி மணிகண்டன், பிரசாத், அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் திருவிடைமருதூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர்.  

அப்போது கொலை முயற்சி வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கும் குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.  இதையடுத்து 3 பேரும் வருகிற 23ம் தேதி தஞ்சை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கொள்ளை மற்றும் அழகாபுத்தூரில் நடந்த கிலிங்ஸ்டன் கொலை ஆகிய இரண்டு வழக்குகளில் வரும் 25ம் தேதி திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி நிலவரசன் உத்தரவிட்டார்.

Related Stories: