கும்பகோணம், அக். 15: கொலை, கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 3 பேரை திருவிடைமருதூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே நாச்சியார்கோயில் பகுதியில் கொலை முயற்சி, கொள்ளை, கொலை என பல்வேறு வழக்குகள் தொடர்பாக லாலி மணிகண்டன், பிரசாத், அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் திருவிடைமருதூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர்.