ஆற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

கும்பகோணம், அக். 15: கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (38). இவர் தனது மனைவியுடன் குடும்ப பிரச்னை ஏற்பட்டு பிரிந்து தன்னுடைய தம்பி பழனிசாமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனநிலை பாதித்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நேற்று அதிகாலை திருப்புறம்பியம் அருகில் உள்ள மண்ணியாற்று பிரிவு கொத்தங்குடி வாய்க்காலுக்கு சென்றார். அப்போது வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: